பூந்தமல்லியில் மூன்று கடைகளில் திருட்டு !
பூந்தமல்லியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு - மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 10:10 GMT
திருட்டு
பூந்தமல்லி டிரங்க் சாலையில், ஏராளமான வணிக கடைகள் உள்ளன. இங்கு பனையாத்தம்மன் கோவில் அருகே உள்ள துணிக்கடை, மளிகைக்கடை, இறைச்சிக்கடைகளை, நேற்று காலை அதன் உரிமையாளர்கள் திறக்க சென்றனர். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூன்று கடைகளின் கல்லா பெட்டியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் மர்ம நபரால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், நள்ளிரவு 1:30 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் 'மங்கி குல்லா' அணிந்து முகத்தை மறைத்தவாறு இரும்பு ராடால் கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கொள்ளையடித்து தப்பி செல்வது தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.