வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2024-01-10 10:10 GMT

திருட்டு நடந்த வீடு 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மதுப்பிரியா (27), மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மதுப்பிரியா உள்ளூரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை அணிந்துள்ள மதுப்பிரியா வீட்டை பூட்டிவிட்டு, கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மதுப்பிரியா வி.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News