இருசக்கர வாகனம் திருட்டு; போலீசார் விசாரணை

திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடு போன நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடக்கிறது.

Update: 2024-07-01 08:56 GMT

திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடு போன நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடக்கிறது. 

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் . பஞ்சாட்சரம் மகன் சந்தோஷ்குமார் (வயது 24). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.அதனை மர்ம நபர்கள் யாரோ? திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News