இருசக்கர வாகனங்களை திருட்டு - போலீசார் விசாரணை !

நள்ளிரவில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடி சென்ற மர்ம நபர்கள் : சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-08 10:39 GMT

சிசிடிவி காட்சி

ஓசூர் நேரு நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிப்பவர்கள் ரவிக்குமார் மற்றும் விக்னேஷ். இவர்களுக்கு சொந்தமான 2 இருசக்கர வாகனங்களை வழக்கம்போல இரவு வீட்டின் அருகே நிறுத்தி உள்ளனர். காலை நேரத்தில் வந்து பார்த்தபோது 2 இருசக்கர வாகனங்களும் காணாமல் போய் இருப்பது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, அதில் 2 மர்ம நபர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு 2 பேரும் ஓசூர் நகர போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News