சிறுவர் பூங்கா இருக்கு ஆனா விளையாட முடியாது

மதுரவாயலில் உள்ள செங்குன்றம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை ஏர்பட்டுள்ளது.

Update: 2024-06-12 09:02 GMT

மதுரவாயலில் உள்ள செங்குன்றம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி கிடப்பதால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை ஏர்பட்டுள்ளது.


செங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவில், சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. அதில் உள்ள சறுக்கு பலகை உள்ளிட்ட, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. அவற்றால், அங்கு விளையாடும் சிறுவர் - சிறுமியர் காயமடைந்தனர். தற்போது, விளையாட்டு உபகரணங்கள் படுமோசமாக உள்ளன. விளையாட வரும் குழந்தைகளும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றன அந்த விளையாட்டு திடலை பராமரிக்கும், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், சிறுவர்களின் நலன் கருதி, உடைந்த பொருட்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News