பிரியாணி பார்சலில் ரத்தக்கறை இருந்ததால் பரபரப்பு!

பிரியாணி பார்சலில் ரத்தக்கரை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Update: 2024-07-05 10:17 GMT

 ரத்தக்கறை 

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்ஷனில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெனோவா என்ற பெண் மட்டன்பிரியாணி சாப்பிட்டு விட்டு, வீட்டில் உள்ள தனது குழந்தைகளுக்கு மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பிரியாணி பார்சலை பிரிக்க எடுத்த போது, அதன் மேற்பகுதியிலும், வெங்காய பச்சடியை அடைத்து வைத்திருந்த கவரின் அடிப்பகுதியிலும் ரத்தக்கறை படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து அவர் தனது கணவர் நித்தியானந்தத்திடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் ரத்தக்கறை படிந்த பிரியாணி பார்சலுடன் சென்று ஓட்டல் ஊழியர்களிடம் காண்பித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஓட்டல்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வரும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து ஓட்டலில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News