நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தென்காசி நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-29 05:44 GMT

நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணை சேர்மன் சுப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 33 வார்டுகளுக்கும் தேவையான பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் தென்காசி ரத வீதியில் உள்ள தண்ணீர் தொட்டியை தனிநபருக்கு சாதகமாக இடிப்பதற்கு பணம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் நகர உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News