வீடுபுகுந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு !

பேராவூரணி அருகே வீடுபுகுந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயின் பறித்த மர்மநபரை தேடிவருகிறார்.

Update: 2024-07-05 05:27 GMT
செயின் பறிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். பேராவூரணி அருகேயுள்ள நெல்லியடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி நாகரெத்தினம் (78) இவர் அதிகாலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்த போது, திடீரென கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், நாகரெத்தினம் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நாகரெத்தினத்தின் மகன் கிருஷ்ணமூர்த்தி பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபரை தேடிவருகிறார். விரல் ரேகை பதிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் விரல் விரல் ரேகை பதிவுகளை ஆய்வு செய்தார். கிராமப் பகுதியில் அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் கிராம மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
Tags:    

Similar News