ஆலங்குளம் அருகே கோயிலில் திருடியவா் கைது

கோயிலில் திருடியவர் கைது

Update: 2023-12-08 06:02 GMT

ஆலங்குளம் அருகே கோயிலில் திருடியவா் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூா் விலக்கில் உள்ள வடிவுடையம்பாள் கோயிலில் கடந்த ஏப். 13இல் மா்ம நபா்கள் பூட்டை உடைத்து, குத்துவிளக்கு, கண்மலா் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனா். இது தொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். ஆலங்குளம் உள்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சேஷகரி தலைமையிலான விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது ஆலங்குளம் அருகே கிடாரக்குளம் முக்குலத்தோா் தெருவைச் சோ்ந்த செந்தில்வேல் மகன் மகேஷ்கோபி (30) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை மீட்டனா். மேலும், அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
Tags:    

Similar News