பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம்

திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குணம் தீர்காசல ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருகல்யாணத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-24 12:10 GMT

திருக்கல்யாணம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை ஸ்ரீ தீர்காசல ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் சேத்துப்பட்டு CNR குடும்பத்தினர் சார்பில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News