திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா!

மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-15 13:41 GMT

மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


வேலூர் மாவட்டம்,கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்றது. விழாவையொட்டி, மகாபாரத சொற்பொழிவு, துரியோதனன் படுகளம், அக்னி வசந்த தீமிதி, கெங்கையம்மன், காளியம்மன் சிரசு திருவிழா ஆகியவை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றுதல், மகாபாரத சொற்பொழிவு, நாடகம்,கூழ்வார்த்தல், வாணவேடிக்கை, அம்மன் வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News