திருத்தணியில் கூட்டுறவு வங்கி சங்க செயலர் விபத்தில் பலி

திருத்தணியில் கூட்டுறவு வங்கி சங்க செயலர் விபத்தில் பலியானர்.

Update: 2024-05-24 09:40 GMT

கோப்பு படம் 

திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 56. மணவூர் தொடக்க வோளண் கூட்டுறவு கடன் சங்க செயலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று காலை தன் இருசக்கர வாகனத்தில், திருத்தணியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு பணிகளை முடித்து விட்டு, அதே வாகனத்தில் மணவூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த நார்ணமங்கலம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த லட்சுமாபுரத்தைச் சேர்ந்த சதீஷ், 40, படுகாயமடைந்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News