பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-07 14:06 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (07.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News