திருவண்ணாமலையில் கிராமசபை கூட்டம் - ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சு. பாப்பம்பாடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

Update: 2024-01-27 09:38 GMT

கிராம சபை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் உடனிருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், பொதுப் பணித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி சிறப் பான முறையில் கிராம சபைக் கூட்டம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. கிராம சபைக் கூட்டம் என்பது கிராமங்களில் உள்ள பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவர்களின் நிறைவு குறைகளை அறிந்து நிறைவேற்றுவது கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News