திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

திருவாரூரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-22 13:42 GMT

மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் உதவி திட்டத்தின் கீழ் 1990 to 91 முதல் 2011 முதல் 12 வரை கடனுதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

தேசிய தாழ்த்தப்பட்டவர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்து கடன் தொகை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவை இல்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.

இத்திட்டம் டிசம்பர் 31ஆம் தேதி வரை முடிவடைந்த நிலையில் மேலாண்மை இயக்குனர் அவர்கள் ஒப்புதல் படி பயனாளிகள் அசல் தொகையை செலுத்திட தற்போது கால அவகாசம் நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News