திருவத்திபுரம் நகராட்சியில் பழுதடைந்த குப்பை வாகனங்களால் அவதி

திருவத்திபுரம் நகராட்சியில் பழுதடைந்த குப்பை வாகனங்களால் தூய்மை பணியாளர்கள் சிரமம்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதுபார்த்து இயக்க வேண்டும் என கோரிக்கை.

Update: 2024-02-17 04:56 GMT

திருவத்திபுரம் நகராட்சியில் பழுதடைந்த குப்பை வாகனங்களால் அவதி

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகளில் குப்பைகள் சேகரித்து 3 இடங்களில் தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 வது வார்டு பகுதியில் இயங்கும் தூய்மை வாகனங்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த வாகனங்களில் தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ளும் போது பழுதடைந்த நிலையில் வாகனங்களை தள்ளி, தள்ளி சிரம்மத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதுபார்த்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News