தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 2பேர் உயிரிழந்த சோகம்.

Update: 2024-02-22 14:33 GMT

சாலை விபத்தில் இருவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குருமூர்த்தி (34). இவர் கே. சண்முகபுரம் பகுதியில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மற்றொரு விபத்து விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அப்பனசாமி (43). இவர் நேற்று விளாத்திகுளம் அருகே வேம்பார் ரோட்டில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த ஓலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பெருமாள் (40) என்பவர் காயம் அடைந்தார். விபத்து குறித்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News