தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டவர்கள் கைது
ஏர்வாடி பகுதியில் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 09:02 GMT
தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த லீலாவிடம் அப்பகுதியை சேர்ந்த வைகுண்டராஜா,மணிகண்டன், ஹரிஹரசுதன் ஆகியோர் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த லீலாவின் மகன் சுபாஷ் வைகுண்டராஜாவை கத்தியால் தாக்கி உள்ளார்.இதில் வைகுண்டராஜா தற்பொழுது ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது குறித்து ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தி சுபாஷ்,மணிகண்டன், ஹரிஹரசுதன் ஆகிய மூன்று பேரை இன்று கைது செய்தனர்.