கரூரில் சூதாடிய மூன்று பேர் கைது.

கரூரில் சூதாடிய மூன்று பேர் கைது.

Update: 2023-11-26 10:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அங்காளம்மன் நகர் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 25ஆம் தேதி மதியம் 2 1/4 மணி அளவில் அங்காளம்மன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள முள்காட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேடு திட்ட சாலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், காமாட்சி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பூபதி ஆகிய மூன்று பேரும் பணம் வைத்து சூதாடியது உறுதி செய்யப்பட்டது. மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 230யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வெங்கமேடு காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News