சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது

சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர் .

Update: 2024-03-21 02:08 GMT

காவல்துறை விசாரணை


police station

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள ஆத்துவழி தலையணை சாலையில் நேற்று மாலையில் வாசுதேவநல்லூர் எஸ்ஐ அவீனா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தந்தை சாலை வழியாக வந்த காரில்காவல்துறையினர் சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது அந்த காரில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது இதுகுறித்து போலீசார் சிந்தாமணி சுரேஷ்(23) அருளாட்சி மகேந்திரன்(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ 1,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், கார் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்து கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News