பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது !

கொளந்தானூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200- பறிமுதல்.

Update: 2024-07-16 06:01 GMT

சூதாட்டம்

கொளந்தானூரில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 200- பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக சிறப்பு காவல் பெண் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 13ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில், கொளந்தானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தாந்தோணி மலை அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராசு, கட்டளை ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கண்ண முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200 பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News