தரகம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது

தரகம்பட்டியில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-11 15:38 GMT

காவல் நிலையம்

பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூபாய் 220 பறிமுதல். கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட, தரகம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் மே 10-ம் தேதி மதியம் 1-மணி அளவில் தரகம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள தேக்கமலையம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த விஜயகுமார், நடுத்தெருவை சேர்ந்த ராஜலிங்கம்,

டி.இடையபட்டி அருகே உள்ள புங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 220யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags:    

Similar News