திருவாரூர் : நகை திருடியவர்கள் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிநகை திருட்டில் அருகே நகைதிருட்டில் ஈடுபட்ட மூன்று பெரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2024-01-03 06:00 GMT
நகை திருட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து நல்லி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குமுதவல்லி என்பவர் சந்திரசேகர் மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே இறங்கியுள்ளார் . அப்போது குமுதவல்லியின் பை கீழே விழுந்துள்ளது. இந்த பையை எடுத்துக் கொடுப்பது போல் இரண்டு பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர் .

இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சேந்தங்குடியை சேர்ந்த அப்பு என்கிற கரன் வயது 21, புள்ளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் ,கீழ பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News