பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்!
கண்ணமங்கலம் பர்வதவர்த்தினி சமேத ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.;
Update: 2024-03-25 09:10 GMT
பங்குனி உத்திரம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பர்வதவர்த்தினி சமேத ராமநாதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க பர்வதவர்த்தினி ராமநாதீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.