அனுமதியின்றி பாஜக கொடி கம்பம் - கிராம நிர்வாக அலுவலர் புகார்

திருப்பத்தூர் அருகே அகரம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Update: 2024-03-13 05:06 GMT

பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட இடம் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அகரம் கிராமத்தில் புதிதாக சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது. அதனை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி கொடிக் கம்பத்தினை ‌ கால்வாயில் வீசி சென்றுள்ளனர். இதன் காரணமாக பாஜகவினர் ஒன்று கூடி பாஜக கம்பத்தை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதன் காரணமாக நேற்று அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. அகரம் கிரமா நிர்வாக அலுவலர் சரண்யா அரசு அனுமதி இன்றி அகரம் கிராமத்தில் பாஜக கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளதாக குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News