திருப்போரூர் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-21 09:04 GMT
திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் , திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர்,திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன், செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் , திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் எம்.சேகர் , வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா , நான்கு சக்கர வண்டி, சாதி சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கினார்கள்.. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் , அரசு அதிகாரிகள் மற்றும் பயனனாளிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News