திருப்பூர் : ரயில் மோதி 2 பேர் பலி

திருப்பூரில் தண்டவாளத்தில் இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் ரயில் மோதி பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-02 03:19 GMT

பைல் படம் 

 திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியை சேர்ந்தவத் ராஜ்குமார் (28), இவருடைய நண்பர் சரவணபவன் (28). இவர்கள் திருப்பூர் காவிலிபாளையம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் அதிகாலை டீ குடித்துவிட்டு இயற்கை உபாதைகள் கழிக்க ரயில் தண்டவாளத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ராஜ்குமார், சரவணபவன் ஆகியோர் டீ குடித்து விட்டு தண்டவாளத்தில் இயற்கை உபாதைகள் கழித்து கொண்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News