திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் காவல் ஆய்வாளர்களுடன் ஆலோசனை

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பிரச்சினைக்குரிய பகுதிகள் குறித்து காவல் ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-02-14 07:42 GMT
திருப்பூர் ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு 114 -திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பிரச்சனைக்குரிய பகுதி குறித்து மாநகராட்சி எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது,உடன் துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News