திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பிரிவு உபச்சார விழா

திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தூய்மைப் பணியாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

Update: 2024-06-28 10:22 GMT

பிரிவு உபச்சார விழா 

திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளர்களுக்கான பிரிவு உபச்சார விழா 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரிமா ஆர். நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. .சுகாதார அலுவலர் என்.இராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஜி.கோகுலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

24 வது வார்டில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தூய்மை பணியாளர்கள் ச.குமார், க‌.சோமசந்தரம், சி.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் மூன்று பேருக்கும் சக தூய்மை பணியாளர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் ,

நண்பர்கள் உள்ளிட்டோர் சந்தனமாலை ,  பட்டாடை , சால்வை , வேட்டி அணிவித்து பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உறவினர்கள் சிலர் தூய்மை பணியாளர்களுக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னச்சாமி , சக்திவேல் , சதாசிவம் , பிரபாகரன் , சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

Tags:    

Similar News