டிஎன்பிஎஸ்சி மாதிரி தேர்வு : ஆட்சியர் தகவல்

விருதுநகரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-24 06:53 GMT

 மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 24.06.2024, 27.06.2024, 02.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/pYLMnf9T38E3DZJB8 என்ற GOOGLE FORM -ஐ பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News