மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு!

திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2024-06-19 07:31 GMT

 தக்காளி 

திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தை மூலம் திருப்பூர் மாவட்டம் முழுவதற்கும் காய்கறிகள் சப்ளை செய்யப்படுகிறது. இங்கு தினம்தோறும் 5,000 பெட்டி தக்காளிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு மொத்தமாகவும் சில்லறை விற்பனையாகவும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வரத்து குறைவாக இருந்ததன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது தேவையான அளவு வரத்து வருவதன் காரணமாக கடந்த வாரத்தை விட விலை குறைந்து. நேற்று தென்னம்பாளையம் சந்தையில் 25 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக முகூர்த்த நாட்கள் மற்றும் பக்ரித் பண்டிகை என்பதால் வியாபாரம் அதிகமானதாக இருந்ததாகவும் இனிவரும் நாட்களில் வியாபாரம் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News