ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-05 04:50 GMT

ஆசிரியர் பணி

திருவண்ணாமலை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 35 இடைநிலை, 11 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை (ஜூலை 6) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய சான்று ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தி.மலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News