சாலையில் உலா வந்த ஆமை

திருவண்ணாமலை ஏரியில் உள்ள ஆமை கால்வாய் வழியாக அப்பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தது.

Update: 2024-05-23 16:59 GMT

சாலையில் ஆமை

திருவண்ணாமலையில் நான்கு நாட்களாக பெய்து வரும் கோடை மழையினால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் திருக்கோவிலூர் சாலை அருகே உள்ள பாரதிதாசன் தெருவில் ஏரியில் உள்ள ஆமை கால்வாய் வழியாக அப்பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆமையை பிடித்து பத்திரமாக மீண்டும் அந்த ஏரியில் விட்டனர்.
Tags:    

Similar News