அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-27 02:36 GMT

குற்றால அருவி

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து வரத் தொடங்கியது . இதை தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அருவிப்பகுதிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நேற்று முதல் மக்கள் குளித்து வருகின்றனர். நேற்று மதியத்திற்கு மேல் மெயின் அருவி திறக்கப்பட்டது.இன்று அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News