குற்றாலம் அருவியில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மழை வரத்து இல்லாததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2024-04-20 03:00 GMT

குற்றாலம் அருவியில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக உள்ள குற்றாலம் அருவிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. இருப்பினும் நேற்று மற்றும் இன்று காலை முதலே மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் இந்த நிலையில் நேற்று இன்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் உள்ளனர். அறிதிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News