மிதமான சாரல் மழை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை பெய்த்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-06-21 12:41 GMT

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை பெய்த்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தென்காசி மாவட்டம் குற்றாலம், ஐந்தருவிப் பகுதியில் மிதமான சாரல்மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் குறைவாக விழுந்தது. குற்றாலம் பகுதியில் அதிகாலை முதல் அவ்வப்போது மிதமான சாரல்மழையும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. குற்றாலம் மலையின் உள்பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீா்வரத்து குறைவாகவே இருந்தது. குற்றாலம் பகுதியில் இதமான தட்பவெப்பநிலை நிலவியபோதும், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால், அவா்கள் கூட்ட நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News