ஏற்காட்டில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்....
விடுமுறை காரணமாக ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள். அசம்பாவிதங்களை தவிர்க்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-08 04:40 GMT
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து படகில் உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இளைஞர்கள், இளம்பெண்கள் இயற்கை காட்சிகளுடன் செல்பி எடுத்து கொண்டனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது.
அசம்பாவிதங்களை தவிர்க்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.