கோடை விடுமுறையை யொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை யொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2024-04-29 13:07 GMT

பார்க்கில் விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்பட்டது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை வியூ பாயிண்ட் ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பலர் குடும்பமாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குளுகுளு சூழல் குறைவாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். மேலும் கோடை விழா மலர்க்கண்காட்சிக்காக பதியம் போடப்பட்டு வளர்க்கப்பட்டு உள்ள செடிகளில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

வனத்துறை பூங்காவில் கட்டப்பட்டு உள்ள கயிறு ஊஞ்சல்களில் ஏறி சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் விளையாடினார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News