ஒரு தலை காதலால் விபரீதம்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

அம்மாபேட்டையில் ஒரு தலை காதல் காரணமாக ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-12-21 11:56 GMT

பைல் படம்

சேலம் அம்மாபேட்டை குருநாதர் முதலியார்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சந்துரு (19). இவர் மேட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியே சென்ற சந்துரு பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இதனிடையே மின்னாம்பள்ளி-வாழப்பாடி ரயில்நிலையத்திற்கு இடைப்பட்ட மேட்டுப்பட்டி தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

அவரின் உடலை பார்த்து பெற்றோர் கதறினர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ரயில்வே போலீசார், சந்துருவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில் சந்துரு, சேலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், எனது பின்னால் சுற்ற வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

இதனிடையே காதலை இளம்பெண் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் விரக்தி அடைந்த சந்துரு நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியேறி சேலம்-விருத்தாசலம் ரயிலில் பாய்ந்து மேலும் அந்த பெண் தனது காதலனிடமும் இதனை தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர்,சந்துருவை செல்போனில் தொடர்புகொண்டு இது பற்றி பேச அழைத்துள்ளார். செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News