சேலத்தில் பரிதாபம்:தாய்ப்பால் குடித்த போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பலி !

சேலத்தில் தாய்ப்பால் குடித்த போது குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2024-04-16 05:40 GMT

 குழந்தை பலி

சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் (வயது 21). இவருடைய மனைவி செல்வி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து அவர் தனது பச்சிளம் குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு செல்வி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை பெற்றோர் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, தாய்ப்பால் குடித்தபோது மூச்சு திணறி குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்ப்பால் குடித்தபோது பச்சிளம் குழந்தை மூச்சு திணறி இறந்திருப்பது செல்வியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News