மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழப்பு

பள்ளிபாளையம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்தார்.

Update: 2024-05-08 15:35 GMT

பள்ளிபாளையம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் இறந்தார்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் பகுதியில் வசிப்பவர் தங்கவேல், 70. விசைத்தறி கூலி. இவரது மனைவி மல்லிகா, 65. ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மல்லிகா சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் இருந்தார். நேற்றுகாலை இவர் இறந்தார்.

இதனால் அவரது உடல் அருகே மன வருத்தத்துடன் இருந்து வந்தார் தங்கவேல். நேற்று மாலை 04:00 மணியளவில், தங்கவேலுவும் இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரது உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News