புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் தென்காசி மாவட்டம், கடயநல்லூரில் நடைபெற்றது.

Update: 2024-01-21 08:10 GMT
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம்,  கடையநல்லூா் வட்டாரத்துக்குள்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் கற்பித்தல் பணியில் இருக்கும் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து முகாமை தொடங்கி வைத்தாா். வாழ்வியல் திறன், எழுத்தறிவு, எண்ணறிவு போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேற்பாா்வையாளா் (பொறுப்பு) பேபிமாலதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுந்தரேஸ்வரி, ஆசிரியா் பயிற்றுநா்கள் முத்துமாரி, வசந்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Tags:    

Similar News