சென்னை மாவட்டத்தில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு‌

சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பபை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்‌.

Update: 2024-04-12 10:25 GMT

வகுப்பில் பேசும் மாவட்ட தேர்தல் அலுவலர்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையருமான ராதாகிருஷ்ணன்,

இன்று (12.04.2024) தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்தப் பயிற்சி வகுப்பில் தேர்தல் பொது பார்வையாளர் (சென்னை வடக்கு) கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் ஆணையாளருமான (வருவாய் (ம) நிதி) லலிதா,

தேர்தல் நடத்தும் அலுவலரும் வடக்கு வட்டார துணை ஆணையாளருமான கட்டா ரவி தேஜா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News