ஆட்சியர் தலைமையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-20 08:31 GMT

பயிற்சி கூட்டம் 

தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024 முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது தினந்தோறும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் 45 நடமாடும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப., தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News