மக்களுடன் முதல்வர் திட்டம்: மனுக்கள் பெறும் ஊழியர்களுக்கு பயிற்சி

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-07-04 17:35 GMT

பயிற்சி 

அரசுத்துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் முதல்கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக தற்போது ஊரகப் பகுதிகளில் வருகிற 15ந் தொடங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவற்றை பதிவு செய்யும் ஊழியர்களுக்காக பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பெறப்படும் மனுக்களை உடனடியாக பதிவு செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.விரைந்து மனுக்களை பதிவு செய்து பொதுமக்களை காக்க வைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News