லஞ்சம் வாங்கிய எஸ். ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

லஞ்சம் வாங்கிய சப் -- இன்ஸ்பெக்டர் மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி, செங்கல்பட்டு எஸ். பி. , சாய் பிரணீத் நேற்று உத்தரவிட்டார்.

Update: 2024-02-15 10:32 GMT

மோகன் 

செங்கல்பட்டு மாவட்டம், படாளம் காவல் எல்லைக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில், சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து, கிணற்று பார் மண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 35, என்பவர், ஜே. சி. பி. , இயந்திரம் மூலம் அள்ளி டிராக்டரில் கடத்தியுள்ளார். அப்போது, அது குறித்த ரகசிய தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற டி. எஸ். பி. , தலைமையிலான தனிப்படை போலீசார், மண் திருட்டில் ஈடுபட்ட கார்த்திக், ஜே. சி. பி. , இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், படாளம் காவல் நிலையத்தில், சிறப்பு சப் - - இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மோகன் என்பவருக்கு, கார்த்திக் லஞ்சம் கொடுத்து, மண் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, சிறப்பு சப் -- இன்ஸ்பெக்டர் மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி, செங்கல்பட்டு எஸ். பி. , சாய் பிரணீத் நேற்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News