சேலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சேலம் கிளை சார்பில், மணக்காடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-06-19 05:24 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சேலம் கிளை சார்பில், மணக்காடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு சம்மேளன செயலாளர் லியாகத்அலி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.835 சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.