மலை கிராம பிஎஸ்என்எல் டவரில் சோதனை ஓட்டம்

பெரும்பாறை பகுதி மலைக்கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவன செல்போன் டவர்களில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-17 08:35 GMT

பைல் படம் 

பெரும்பாறை பகுதி மலைக்கிராமங்களில் அதிக தொலை தொடர்பு வசதி இல்லாமல் இருந்ததால் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று புல்லாவெளி, வெள்ளரிக்கரை, குப்பமாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை பகுதிகளில் 5 பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி நடந்து முடிவடைந்தது.இந்நிலையில் புல்லாவெளி, வெள்ளரிக்கரை ஆகிய 2 பிஎஸ்என்எல் டவரில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. மற்ற 3 டவர்களில் சில நாட்களில் சோதனை ஓட்டம் விடப்படும். பின்னர் அடுத்த வாரத்தில் 5 பிஎஸ்என்எல் டவர்களும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News