வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா

ஸ்ரீ மரகதவள்ளி தயார் சமேத ஸ்ரீமதன கோபால சுவாமிபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

Update: 2023-12-24 07:43 GMT

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீ மரகதவள்ளி தயார் சமேத ஸ்ரீமதன கோபால சுவாமிபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக டிசம்பர் 23ம் தேதி நடைபெற்றது. இரவு 8:00 மணி அளவில் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பெரிய தெற்குதெரு, ஐயப்பன் கோவில் தெரு கடை வீதி, வழியாக திருவீதி உல வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்து மீண்டும், திருக்கோயில் வந்தடைந்தார், இதனை பக்தர்கள் கோவிந்தா முழுக்கமிட்டு தரிசித்தனர். விழாவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் முன்னாள் அறங்காவலர் குழு வைத்தீஸ்வரன், கண்ணன், மாமல்லன், அசோக் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் விழா பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.
Tags:    

Similar News