லாரி - கார் மோதல்: ஒருவர் பலி!

லாரி - கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2024-07-08 06:23 GMT

புதுக்கோட்டை

புதுக்கோட்டை: கரூர் மஞ்சபட்டியை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரம் (45).இவர் நேற்று காரில் அறந்தாங்கி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். கைக்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மாணிக்கசுந்தரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லத்திரா கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News